திருவனந்தபுரம்: இந்திய கால்பந்து அணி முன்னாள் நட்சத்திர வீரர் ஹம்சா கோயா, கொரோனா தொற்று காரணமாக காலமானார். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்தவர் ஹம்சா கோயா (61). இவர் 1970-80 காலகட்டத்தில் இந்திய கால்பந்து அணிக்காக விளையாடி உள்ளார். தேசிய அளவில் மஹாராஷ்டிரா மாநிலத்துக்காக சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியிலும், பிரபல கால்பந்து கிளப் அணிகளான மோகன் பஹான், முகமதன்ஸ் சார்பாகவும் பலமுறை களமிறங்கி உள்ளார். மும்பையில் இருந்த இவர், மேத மாதம் 21ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால், மஞ்சேரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.