சென்னை: மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்கு தள பகுதிகளில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை செய்வது, வரும் இன்று (7ம் தேதி) முதல் தடை செய்யப்படுகிறது. எனினும், சில்லறை வியாபாரிகள் துறைமுக பகுதியில் இருந்து மீன்களை வாங்கி சில்லறை விற்பனைக்கென மீன்பிடி துறைமுகத்தின் வடக்கு பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200 கடைகளில் மீன்களை விற்பனை செய்யலாம். தற்போது மீன்பிடி துறைமுக பகுதியில், சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மட்டும் இந்த புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.