கூடலூர்: பெரியாறு அணை பணிக்குச் சென்ற, தமிழகப் பொதுப்பணித்துறை ஊழியர்களை, அணைப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் கேரள சுகாதாரத்துறை தனிமைப்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தை ஒட்டிய கேரளப்பகுதியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணைக்கு, தேக்கடியிலிருந்து படகு மூலமாகவும், வல்லக்கடவு வனப்பகுதி வழியாக ஜீப் மூலமாகவும் செல்லலாம். கொரோனா ஊரடங்கால் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை கேரளாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்துகின்றனர்.