ஈரோடு: பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு எந்த மாதிரி சலுகைகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். கொரோனாவால் பள்ளி செயல்படாத 2 மாத காலங்களை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.