தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியத்தெருவில் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் டாக்டர் ரத்தினம் (91). தனக்கு சொந்தமான கட்டிடத்தில் 6 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களால் எப்படி நமக்கு வாடகை தர முடியும் என்று நினைத்த டாக்டர் ரத்தினம் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கும் நீங்கள் எனக்கு வாடகை தர வேண்டாம் என்று வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்த கடைகளில் ஒரு மாதம் ரூ1.40 லட்சம் வாடகை வரும். 3 மாதங்களுக்கும் வாடகையான ரூ4.20 லட்சத்தை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.