சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அதில் பயணிக்கலாம். பேருந்தில் செல்லும்போது ஹால்டிக்கெட், அடையாள அட்டைகளை காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையல் பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்பட உள்ளன.
10-ம் வகுப்பு பொது தேர்வு; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து: பள்ளிக்கல்வித்துறை
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு மாவட்டங்கள்: பள்ளி 10 ஆம் வகுப்பு
- செங்கல்பட்டு மாவட்டங்கள்: பள்ளி