×

மும்பையில் சிக்கிய 180 புலம்பெயர் தமிழர்களை சொந்த ஊர் திரும்ப உதவிய சோனு சூட்: ஆரத்தி எடுத்து வாழ்த்திய பெண்கள்!!

மும்பை : கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களை பேருந்து, விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வரும் நடிகர் சோனு சூட், மும்பையில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்பவும் உதவியிருக்கிறார். மும்பை சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு அந்த பகுதியை சேர்ந்த சிலர் நடிகர் சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று உதவி கேட்டனர். இதையடுத்து சோனு சூட் சயான்கோலி வாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதையடுத்து அவர் பேருந்து மூலம் மும்பையில் சிக்கிய தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.தினமும் ஒரு பேருந்து மட்டும் வர தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், முதல் பேருந்து மட்டும் வர தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், முதல் பேருந்து நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். மேலும் பத்திரமாக செல்லுமாறு தமிழர்களிடம் கூறினார்.இதேபோல தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். புலம் பெயர் தொழிலாளர்களை தனது சொந்த செலவில், விமானம் மற்றும் பேருந்து மூலம் அனுப்பி வரும் சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.


Tags : Mumbai ,Tamils ,home ,Sonu , Mumbai, 180, Diaspora, Tamils, Hometown, Sonu Suite, Arathi, Greetings, Women
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...