×

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு; ஜூலை 3-வது வாரத்தில் முடிவுகள் வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியீடு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி தொடங்கி, 25 வரை நடக்கிறது.

அதேபோன்று, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள பாடத் தேர்வு ஜூன் 16 ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கான நிலுவை பாடத் தேர்வு ஜூன் 18 ம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் என கூறினார்.

சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் வெளியிட்டு உள்ள தகவலில் சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் உள்ளன. வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தனி அறையில் வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள் சுகாதார துறை உதவியுடன் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறிப்பட்டு வருகின்றன என கூறப்பட்டு உள்ளது.

Tags : Senkottaiyan. ,general election ,Senkottaiyan , General Election, Results, Minister Senkottaiyan
× RELATED மாற்றுத்திறனாளிகள் உடனே வாக்களிக்க அனுமதி