×

100 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதன்முறை; ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவது சினிமாத்துறைக்கு நல்லதல்ல; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி...!

தூத்துக்குடி: ஆன்லைனில் திரைப்படங்களை படம் வெளியிடுவது ஆரோக்கியமானதாக இருக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பபட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், அமெஸான் பிரைமில் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இன்னும், முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஜே. ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆன்லைனில் திரைப்படங்களை படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது. ஆன்லைன் வெளியீட்டாள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்படுவார்கள். அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும். திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை. திரைத்துறையில் ஜிஎஸ்டி குறைப்பு பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார்.


Tags : Interview ,Kadambur Raju ,Minister Kadambur , This is the first time in its 100-year history; Publishing movies online is not good for the cinema industry; Interview with Minister Kadambur Raju ...!
× RELATED இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க...