ராமேஸ்வரம்: ஊழியர்கள் சேமநலநிதி சேமிப்பு பணம் ரூ.74 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், நேற்று 2வது முறையாக சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் விசாரணை செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பணியாற்றும் ஊழியர்களின் சேமநல நிதி சேமிப்பு பணம் ரூ.74 லட்சம் கடந்த ஆண்டு கையாடல் செய்யப்பட்டது இதுதொடர்பான வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் 2 பேர் கைதாகி, ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு குறித்து முன்பு பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பலரையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக ராமநாதசுவாமி கோயில் தேவஸ்தான அலுவலகத்தில், சிபிசிஐடி போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.