திருவள்ளூர்: திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி சாலை, பொன்னப்பன் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (25). இவர் மீது திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே ரவுடி ஐயப்பனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த ரவுடி ஐயப்பன், சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 குற்ற வழக்குகளில் ஈடுபட்டார்.