சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனாவுக்காக தள்ளி வைக்கப்பட்ட மின்கட்டண வசூலை கொரோனா தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் கட்டாயப்படுத்தி வசூலித்துக் கொண்டிருக்கிறது. கணக்கீட்டை காட்டி அரசு தப்பிக்க முடியாது. மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளைதான். சராசரியாக ஒரு நாளைக்கு 8 யூனிட் மின்சாரம் செலவழிக்கும் ஒரு குடும்பம் கூடுதலாக ஒரு நாளைக்கு 1/2 யூனிட் அதிகமாக செலவழித்தாலே அந்த குடும்பம் 1130 ரூபாய்க்கு பதிலாக 1846 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.