மும்பை: நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் மும்பையிலும் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் கூடி கொண்டே வருகிறது. இந்தநிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை அளித்த தகவலின்படி, மராட்டியத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்தனர். மராட்டியத்தில் ஒரே நாளில் 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 80,229 ஆக உயர்ந்தது. இதுவரை 2,849 பேர் பலியாகியுள்ளனர்.