சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி டிரைவராக பணியாற்றும் குரோம்பேட்டையை சேர்ந்த 45 வயது நபருக்கு, கடந்த 2 தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.