வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை, பைபாஸ் சாலை மற்றும் தரமணி 100 அடி சாலை ஆகியவை இணையும் விஜயநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள சுமார் 8826 சதுர அடி பட்டா நிலத்திற்கான உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்க நடந்து வந்த நிலையில், அந்த இடத்தை தவிர்த்து விட்டு மற்ற இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.