×

மேம்பால பணிக்கு இடையூறு விஜயநகர் சந்திப்பில் 7 கடைகள் அகற்றம்

வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலை, பைபாஸ் சாலை மற்றும் தரமணி 100 அடி சாலை ஆகியவை இணையும் விஜயநகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள சுமார் 8826 சதுர அடி பட்டா நிலத்திற்கான உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில்   வழக்கு தொடர்ந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்க நடந்து வந்த நிலையில், அந்த இடத்தை தவிர்த்து     விட்டு மற்ற இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 நீதிமன்ற வழக்கு காரணமாக குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பணி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. இந்த வழக்கு, சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அதில், நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிலத்தை   ஆர்ஜிதம் செய்ய நேற்று காலை மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தில் இருந்த 7 கடைகளை இடித்து அகற்றி, நிலத்தை  கையகப்படுத்தினர்.



Tags : shops ,junction ,Vijayanagar Junction Vijayanagar , Disruption ,advanced work, Vijayanagar ,junction
× RELATED அருமனை அருகே பள்ளியில் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு சிக்கியது