தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் கேரளம் மற்றும் கர்நாடகத்தில் தீவிரமடையும்: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் கேரளம் மற்றும் கர்நாடகத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நிசர்கா புயல் பலவீனமடைந்து காற்றழுத்த சுழற்சியாகி சிக்கிம்-பூடானை நோக்கி நகர்ந்து செல்கிறது.  சிக்கிம்-பூடானை நோக்கி காற்றழுத்த சுழற்சி செல்வதால் மீண்டும் பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஜூன் 10-லிருந்து 14 வரை கர்நாடகத்தில் காவிரி நிரப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளத்தின் வயநாட்டிலும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: