தஞ்சை: தஞ்சையில் மேற்கு வங்க பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில், எஸ்ஐ உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை-திருச்சி புதிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி-சானூர்பட்டி பிரிவு அருகே சாலையில் இளம்பெண் கடந்த 1ம் தேதி உடலில் காயங்களுடன் கிடந்தார். அந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர், அப்பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கூறியதாவது: எனது சொந்த ஊர் மேற்கு வங்க மாநிலம் துர்காபூர். பல ஆண்டுகளாக பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வந்தேன். பெங்களூருவில் உள்ள சித்தி மகள் சாந்தா மூலம் ஒருவர், கடந்த 4 மாதங்களுக்கு முன் என்னை அழைத்து வந்து தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் ‘வீட்டு வேலைக்கு’ என கூறி சேர்த்துவிட்டார். ஆனால் அங்கே இருந்தவர்கள் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.