ஜெ.அன்பழகன் உடல்நிலை ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்(61) கடந்த 2ம் தேதி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்கு கடுமையான சுவாச பிரச்னை இருந்தது. தொடர்ந்து அவருக்கு கோவிட் பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

ஆரம்பத்தில் அன்பழகனுக்கு “டேஸ்மாக்” மூலம் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டது. சுவாச பிரச்னை மோசமடைந்ததால் அவருக்கு “வென்டிலேட்டர்” உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் வென்டிலேட்டர் மூலம் தான் 80 சதவீதம் ஆக்சிஜன் பெறுகிறார். கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Related Stories: