சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்(61) கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்கு கடுமையான சுவாச பிரச்னை இருந்தது. தொடர்ந்து அவருக்கு கோவிட் பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.