சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமான் மீட்பு

சாத்தூர்: சாத்தூர் அருகே நத்தத்துபட்டி கிராமத்தில் கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டனர். சாத்தூர் அருகே நத்தத்துபட்டி காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நேற்று அதே கிராமத்தில் பழனி என்பவர் தோட்டத்தில் தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையிலான வீரர்கள், புள்ளிமானை உயிருடன் மீட்டு திருவில்லிபுத்தூர் வனவர் மாடசாமி, வனக்காவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். புள்ளிமானிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: