ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி:  கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி எஸ்ஐக்கள் சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, போலீஸ்காரர் ராஜசேகர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த பைக்கை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டி சென்றனர். இதனால் போலீசார் ஜீப்பில் அவர்களை விரட்டிச் சென்று அரை கிலோ மீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர்.

 பைக்கை சோதனை செய்தபோது ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் பொன்னேரியை சேர்ந்த பிரதீப் (23), சரத்குமார் (24) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: