காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நகர, ஒன்றிய நலிந்த திமுகவினர் 2597 பேருக்கு, கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தலைமையில் கே.பி.கே.ரத்தினாபாய் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.காஞ்சிபுரம் நகர திமுக செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு கொரோனா 144 தடையால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 2597 நலிந்த திமுகவினருக்கு அரிசி, மளிகை உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.