கொரோனா நிவாரணமாக 25 லட்சம் நிதி வழங்கிய யமஹா நிறுவனம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் யமஹா பைக் தயாரிப்பு தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த 2 தொழிற்சாலைகளிலும் 6500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கினர். அந்த தொகை 25 லட்சத்தை யமஹா நிறுவன நிர்வாக இயக்குநர் யுகிஹிகோ தடா, நிர்வாக துணைத்தலைவர் தஹாஹிரோ ஹென்மி ஆகியோர் கலெக்டர் பொன்னையாவிடம் வழங்கினர். உடன், யமஹா தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் வேல்முருகன் உள்பட பல இருந்தனர்.

Related Stories: