வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது சிறுவன். இவரது உறவினரான 25 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால் குடும்ப பிரச்னை காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனது மகளை 2வதாக திருமணம் செய்பவருக்கு கார் மற்றும் பணம் அதிகளவில் தருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையறிந்த சிறுவனின் தந்தை கார், பணத்துக்கு ஆசைப்பட்டு, அந்த பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வந்தது.இந்த திருமணத்துக்கு சிறுவனின் தாய் மற்றும் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.