×

டாக்டர்களை கத்தியை காட்டி மிரட்டிய கொரோனா நோயாளி கைது

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 26ம் தேதி சேர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி டாக்டர்கள், நர்சுகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் பழம் வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து, டாக்டர்களை குத்த முயன்றாராம். கவச உடை அணிந்த போலீசார் வந்து கத்தியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் நேற்று 2ம்கட்ட பரிசோதனையில், ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ெகாரோனா குணமானது தெரியவந்தது. டாக்டர்கள் புகாரின்படி ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Coroner ,doctors ,Patient , Doctors,blade, corona,arrested
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...