சென்னை: டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள் மற்றும் மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. சென்னை மாநகரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே நோய் தொற்றின் வேகம் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தமிழகம் காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் ஒருவருக்கும், அவருடன் பணியாற்றும் 2 டிஎஸ்பிக்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், சென்னை மாநகர காவல் துறையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 2 எஸ்பிக்கள், 2 டிஎஸ்பிக்கள் உட்பட 11 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.