திருவனந்தபுரம்: கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது. அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் யானையை கொடூரமாக கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.