சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 170 பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். மே 5ம் தேதி தொடங்கிய விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. அண்ணா பல்கலை சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றுவோர் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 10ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தொடங்குகிறது என தேடல் குழு சிறப்பு அதிகாரி ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.