உயிர்தேசம், பொருட்சேதம் எதும் இல்லை; கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்; அதிகப்பட்சமாக ரிக்டர் அளவில் 4.7-ஆக பதிவு...!

பெங்களூரு: கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹம்பி மாவட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆக  பதிவாகியுள்ளது. இதனைபோல், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூர் மாவட்டத்தில் இன்று காலை மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது .இது ரிக்டர் அளவு கோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இரு நிலநடுக்கங்களால் உயிர்தேசம், பொருட்சேதம் குறித்த தகவல் இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய-வங்காளதேச எல்லையில் நேற்று காலை 7.10 மணிக்கு நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல்ககள் இல்லை. மேகாலயாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: