புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் இருந்த மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்தவர் போலீஸ் அதிகாரியால் கழுத்தில் கால் வைத்து மிதித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் வலுத்துள்ளதோடு, ஆங்காங்கே வன்முறைகளும் கலவரங்களும் வெடித்து வருகின்றன. பல்வேறு நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், அதனை மீறி பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாஷிங்டன்னில் இந்திய தூதரகத்துக்கு வெளியே இருந்த மகாத்மா காந்தி சிலை அடையாளம் தெரியாத போராட்டக்காரர்கள் மூலமாக சேதப்பட்டுத்தப்பட்டுள்ளது.