புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு கருதி எம்பிக்களின் பிஏக்கள் நாடாளுமன்றத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டத் தொடர் நடக்கும் சமயத்தில் நாடாளுமன்றத்தில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க எம்பிக்களின் பிஏக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவை தலைமை செயலாளர் ஸ்நேகலதா ஸ்ரீவஸ்தவா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கொரோனா பாதிப்பால், எம்பிக்களின் பாதுகாப்பு கருதி அவர்களின் பிஏக்கள் நாடாளுமன்றத்திற்கு வர தடை விதிக்கப்படுகிறது.