டெல்லி: இந்தியாவில் ஊரடங்கு என்பது தோல்வியடைந்த ஒன்று என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தொற்று அதிகரிக்கும் போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன. மேலும் ஏழைகள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உலகப் போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை ஏற்பட்டதில்லை என் அவர் தெரிவித்துள்ளார்.