டெல்லி: கொரோனா நெருக்கடி காலத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற இந்தியா முடிவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உறவு ஆழமாகவும், அதேசமயம் விரிவடைந்தும் வருகிறது. மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு உலகிற்கு நன்மை பயப்பதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.