×

செங்கல் சரிந்து விழுந்து 2 பெண்கள் சாவு

பொன்னேரி:  மீஞ்சூர் அருகே வழுதிகைமேடு கிராமத்தில் சுதாகர் என்பவர், செங்கல் சூளை நடத்தி வருகிறார். இங்கு, ஊரடங்கு காலத்திலும் வடமாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை 7 மணியளவில் வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் அடுக்கி வைத்திருந்த செங்கல்கள் திடீரென மளமளவென கீழே சரிந்தது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த மதினா (18), பரிமளா (19) ஆகியோர் சிக்கி அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், 2  பேர் படுகாயமடைந்தனர். புகாரின்படி மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிந்து, செங்கல் சூளை உரிமையாளர் சுதாகரிடம் விசாரிக்கின்றனர்.



Tags : 2 women die
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...