பிரபல ரவுடிக்கு 269 நாட்கள் சிறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் அமுல்ராஜ் (31). பிரபல ரவுடி. இவர்மீது காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 கொலை, 4 கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் பல காவல் நிலயங்களில்  உள்ளன. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், சிவகாஞ்சி போலீசார் ரவுடி அமுல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர், குற்றச் செயலில் ஈடுபட்டதால், கடந்த ஜூன் 1 முதல் 24-02-2021 வரை 269 நாட்கள் புழல் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரவுடி அமுல்ராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: