சென்னை : தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்பவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம் பெற வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் 10 அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அரசு மருத்துவமனையில் வீட்டு முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெற்ற பின்பே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு வருபவர்களிடம் முறையான தகவல் பெறுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களின் தொடர்புகளை கண்டறிய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயம்் பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.