9 ஆயிரம் நிவாரணம் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க விருதுநகர் மாவட்டத் தலைவர் ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொேரானா நிவாரண நிதி ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், இதே கோரிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு உள்ளதால், இந்த மனுவின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தனர்

Related Stories: