மதுரை: தமிழகத்தில் யாரும் வேலை பார்க்காமல் டாஸ்மாக் கடைக்கு செல்வதையே விரும்புவதாக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். ராமநாதபுரம் மேல்கரையைச் சேர்ந்த மலைக்கண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்திலுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பதிவு செய்யாமல் உள்ள அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘புலம் பெயர் தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.