கோபி: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள நிலையில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது? என்பது குறித்து 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தற்போது செயல்பட துவங்கி உள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்தை அறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.