திருபுவனை: திருபுவனை அடுத்த மதகடிப்பட்டு அருகாமையில் கலித்தீர்தாள்குப்பம் ஊரல் குட்டை பகுதியில் நரிக்குறவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 31) தமிழ்முரசில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வண்டி செல்லும் பாதையில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி வைத்தனர்.