புடாபெஸ்ட்: கொரோனா தொற்று பீதிக்கு பின் உலகில் முதல்முறையாக ரசிகர்களுடன் கால்பந்து போட்டி ஹங்கேரியில் நடந்துள்ளது. தென் கொரியாவில் கே லீக், ஜெர்மனியின் பண்டெஸ்லிகா கால்பந்து தொடர்களை தொடர்ந்து இத்தாலியில் சீரி ஏ, இங்கிலாந்தில் பிரிமீயர் லீக், அடுத்து ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர்கள் இன்னும் சில நாட்களில் மீண்டும் தொடங்க உள்ளன. இந்த போட்டிகள் எல்லாம் மூடிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் போட்டிகள். ஆனால், ஹங்கேரியில் முதல் முறையாக ரசிகர்களுடன் கால்பந்து போட்டி நடந்துள்ளது. ஹங்கேரியின் வடக்குப் பகுதியில் உள்ள மிஸ்கோல்க் நகரில் வார இறுதியில் நடைப்பெற்ற இந்த போட்டியை அந்நாட்டு கால்பந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.