காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்.கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவந்திப்போரா பகுதியில் உள்ள சைமோவில் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.