கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அசாமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலைபாங்கான மாநிலம் என்பதால், பல இடங்களில் சிறிய அளவில் பாறைகள் உருண்டும், மண் சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அம்மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 பேர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும், பலர் புதையுண்டு இருக்கலாம் என்பதால், மாநில பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.