சென்னை: மாதவரம் ஆவின் பண்ணையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூன்று ஷிப்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தினமும் சுமார் 3 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 40 லாரிகள் மூலம் சென்னையில் உள்ள பல்வேறு விநியோகஸ்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு வர அச்சப்படுவதால் முழுமையாக உற்பத்தி செய்ய அதிகாரிகள் திணறி வருகின்றனர். நேற்று முன்தினம் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.