சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் நாளை கரையை கடக்கும் என்பதால், தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி வடக்கு திசையில் நகரும். இதனால் லட்சத்தீவு கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் கர்நாடக மற்றும் கோவா கடலோர பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.