சென்னை: விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி அழைப்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு ெவளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் யுனைடெட் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கிரிகோரி ஜே ஹேயஸ், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் லாரன்ஸ் கல்ப், போயிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் தவே கல்ஹவுன், லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மரிலின் ஹீவ்சன், சாப்ரான் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் பிலிப் பெட்டிட்கோலின்,