×

வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை-செவல்பட்டி சாலை பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே குகன்பாறையில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலையில் அலமேலுமங்கைபுரம் பகுதியிலுள்ள பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை கிராமம் உள்ளது. இங்கிருந்து கோவில்பட்டி, சங்கரன்கோவிலுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளதால் குகன்பாறை சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குகன்பாறை கிராமத்தில் இருந்து செவல்பட்டி வரை சாலை 7 மீட்டர் வரை அகலமுடையது. அலமேலுமங்கைபுரம் பகுதியில் தரைப்பாலம் 5 மீட்டர் நீளம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சாலை குறுகலாக உள்ளது.

வாகனங்கள் இந்த சாலையில் வேகமாக செல்லும் போது எதிரே வாகனங்கள் வந்தால் பாலத்தில் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் பாலத்தின் பக்கவாட்டில் ஒரு புறம் சிமென்ட் தடுப்பு சுவர், மறுபுறம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரும்பு தடுப்பில் எந்தவித எச்சரிக்கை ஸ்டிக்கரும் இல்லை. இரவில் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும் போது தடுப்பு கம்பி இருப்பதே தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே குகன்பாறை-செவல்பட்டி சாலையில் உள்ள பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road bridge ,Vembakkottai Vembakkottai ,Kuganparai-Chevalpatti ,Kuganparai-Sewalpatti , Vembakkottai, Guganpara-Chevalpatti, Bridge
× RELATED புதுக்கோட்டை அருகே சாலையில் உள்ள...