பவானி: ஈரோடு மாவட்டம் பவானிக்கும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரு பாலங்களில் நேற்று போக்குவரத்து துவங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோடு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு கடந்த மார்ச் 22ம் தேதி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்புற ரோடுகள் சீல் வைத்து மூடப்பட்டதோடு, பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. இதனால், பவானியையும், குமாரபாளையத்தையும் இணைக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய மற்றும் புதிய பாலங்கள் தகர சீட்டுகள் வைத்து கட்டப்பட்டதோடு, தடுப்புகளும் வைத்து மூடப்பட்டன.