சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜி.ராஜேஷ் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மனுவில் புகார் தெரிவித்திருந்தார். வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் தொடர்ந்த பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.