புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புதையல் மற்றும் ஆண் வாரிசுக்காக 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான பன்னீர் செல்வத்திற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தமக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த பன்னீர் செல்வம், நண்பர் ஒருவரின் உதவியுடன் மந்திரவாதியை நாடினார். மகளை நரபலி கொடுத்தால், ஆண் வாரிசு உருவாகும் என்றும் கூடவே புதையல் கிடைக்கும் என்றும் மந்திரவாதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.